shadow

தமிழக அமைச்சரின் நடவடிக்கைக்கு பாமக ராம்தாஸ் பாராட்டு

தேர்தல் நெருங்க நெருங்க பகைமையான கட்சிகள் கூட உறவாடி வரும் நிலை உள்ளது. ஏற்கனவே மதிமுகவின் வைகோ, தமிழக அரசின் செயல்பாடுகளை பாராட்டி வந்த நிலையில் தற்போது தமிழக அமைச்சரின் நடவடிக்கைக்கு பாமக ராம்தாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பிற மொழிகளில் உள்ள 3 ஆயிரம் ஊர்களின் பெயர்கள் தமிழில் மாற்றம் செய்யப்படும் என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் நேற்று முன்தினம் கூறியிருந்ததற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டாக்டர் ராம்தாஸ் தனது டுவிட்டரில் கூறியதாவது: தமிழ்நாட்டில் உள்ள ஊரின் பெயர்கள் தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் மாற்றப்படும் என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறியிருப்பது நல்ல நடவடிக்கை. பாராட்டத்தக்கது. இந்த மாற்றங்கள் பெரிதல்ல. தமிழை பயிற்று மொழியாக்குவதற்கான சட்டம் என்னவானது?. அதை உடனே நிறைவேற்றி நடைமுறைப்படுத்துங்கள்.

Leave a Reply