shadow

தமிழகம் முழுவதும் கனமழை எச்சரிக்கை: உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தல்

தமிழகம் முழுவதும் வரும் 7ஆம் தேதி 25 செமீ அளவுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சசரித்துள்ளது. இதனையடுத்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் இதுகுறித்த அறிவிப்பை தமிழக அரசு செய்துள்ளது.

அக்டோபர் 7ஆம் தேதி கன மழை பெய்யும் வாய்ப்புள்ளதால் உஷாராக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மழைக்கால முன்னேற்பாடுகள் குறித்து வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும், இந்த ஆய்வு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதேபோன்ற ஒரு எச்சரிக்கையை கடந்த மாதம் வானிலை மையம் கேரளாவுக்கு கொடுத்தது என்பதும் அதன்பின்னர் அம்மாநிலத்தில் கனமழை பெய்து வெள்ளத்தால் அம்மாநிலமே உருக்குலைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply