shadow

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் புதுவையிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தமிழகத்தில் மேலும் சில மாவட்டங்களிலும் பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது