இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது என்பதும் தினமும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருக்கும் 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

வரும் 23ஆம் தேதி காணொளி மூலம் அவர் ஆலோசனை செய்ய உள்ளதாகவும் இந்த ஆலோசனையில் தமிழகம் உள்பட 7 மாநில முதல்வர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

டெல்லி, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகம், தமிழகம் உள்பட 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை இருப்பதால் மீண்டும் இந்த ஏழு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக என்ற அச்சம் பொது மக்களிடையே ஏற்பட்டுள்ளது

Leave a Reply