தமிழகத்தை அடுத்து புதுச்சேரியிலும் பாத்ரூமில் வழுக்கி விழும் ரவுடிகள்!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக ரவுடிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டால் அடுத்த நாளே அவர்கள் பாத்ரூமில் வழுக்கி விழுந்து கை அல்லது கால் எலும்புகள் முறிவடைந்து மாவுக்கட்டு போட்டு போன்ற புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகும் என்பது தெரிந்ததே

இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தாலும் சமூக ஆர்வலர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். சட்டத்தை யாரும் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதே இவர்களது வாக்குவாதமாக இருந்தது

இந்த நிலையில் தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் கைது செய்யப்படும் ரெளடிகளின் கை கால்கள் முறிந்து கொள்ளும் சம்பவம் நடந்துள்ளது. புதுச்சேரியில் சமீபத்தில் காவலர்களை தாக்கிய ரெளடி கைது செய்யப்பட்டார். ஆனால் கைது செய்யப்பட்ட அடுத்த நாளே இடது மற்றும் வலது கையில் மாவுக்கட்டுடன் படுக்கையில் படுத்திருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளிவந்துள்ளது. இவரும் பாத்ரூமில் வழுக்கி விழுந்தாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது

Leave a Reply