தமிழகத்தில் ராகுல்காந்தி தேர்தல் பிரச்சாரம்
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தமிழகத்தில் நாளை பிரச்சாரம் செய்யவுள்ளார். முதல்கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில் வரும் 18ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த இரண்டாம் கட்டத்தில் தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகளிலும் 18 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறவுள்ளது
இந்த தேர்தலுக்கான பிரச்சாரத்திற்கு நாளை ராகுல்காந்தி தமிழகம் வரவுள்ளார். அவர் நாளை கிருஷ்ணகிரி, சேலம், தேனி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.