shadow

கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருவதால் தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும்.

16 மாதங்களுக்கு பிறகு பள்ளிக்கு வரும் மாணவர்கள் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கக்கூடும் என்பதால் தொடக்கத்தில் பாடங்கள் நடத்த வேண்டாம்.

சிறுவினாக்கள், ஒருவரி வார்த்தைகள் போன்ற எளிய நடை முறையில் பாடங்களை மூன்று வாரங்களுக்கு நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.