தமிழகத்தில் தேர்தல் தேதி மாற்றமா? மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18ஆம் தேதி மதுரையில் முக்கிய திருவிழாவான சித்திரை திருவிழா நடைபெறுவதால், அன்றைய தினத்தில் தேர்தல் நடத்தக்கூடாது என்று அனைத்து அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இதுகுறித்த வழக்கு ஒன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்த வழக்கின் விசாரணை நடந்தது

இன்றைய விசாரணையின்போது தமிழகத்தில் தேர்தலை ஏப்.23ல் நடத்த முடியுமா என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து வியாழக்கிழமைக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Reply