தமிழகத்தில் தீபாவளி மது விற்பனை ரூ.455 கோடி: இதுவொரு சாதனையா?
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் ரூ.455 கோடிக்கு மது விற்பனை எனத் தகவல் வெளிவந்துள்ளது
மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என விளம்பரம் செய்து கொண்டே மது விற்கப்படுகிறது. அதுவும் ஒரு அரசே மதுவை விற்பனை செய்கிறது என சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் தீபாவளி மது விற்பனை ரூ.455 கோடி என அரசு தரப்பில் இருந்து தகவல் வெளிவந்துள்ளது. தமிழகத்தில் தீபாவளி மது விற்பனை ரூ.0 என என்று செய்தி வெளியாகின்றதோ, அன்றுதான் நாடு உண்மையிலேயே விடுதலை அடைந்துவிட்டதாக கருதப்படும். மதுவினால் மது குடிப்போர்களுக்கு மட்டுமின்றி அவரது குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் மிகப்பெரிய தீங்கு ஏற்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.