தமிழகத்தில் தனித்து போட்டியிட தயார்: தமிழிசை சவுந்தரராஜன் அதிரடி
வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட்டால் பாஜகவும் தமிழகத்தில் தனித்து போட்டியிட தயார் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மேலும்
கூட்டணி அமைவது தேவையானது என்பது மட்டுமின்றி காலத்தின் கட்டாயம் என்று கூறிய தமிழிசை, வாக்குகள் சிதறாமல் பெற கூட்டணி தேவை என்றார்.
அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெறுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அதிமுக கூட்டணி இல்லையெனில் பாமக, தேமுதிக கட்சிகளை இணைத்து புதிய கூட்டணியை பாஜக அமைக்கும் என தெரிகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.