தமிழகத்தில் கனமழை…. எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை ஆரம்பித்து பல இடங்களில் கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து கொண்டிருக்கின்றது. சென்னையின் பல பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் கனமழை பெய்து கொண்டிருக்கும் 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். அந்த மூன்று மாவட்டங்கள் நாகை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்ள் ஆகும். இருப்பினும் இந்த மூன்று மாவட்டங்களிலும் கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும்
மேலும் நாகை உள்ளிட்டா ஒருசில பகுதிகள் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் கடந்த இரண்டு நாட்களாக மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.