தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான்: அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் கடைபிடிக்கப்படும் என்றும், இருமொழிக் கொள்கைதான் கடைபிடிக்கப்படும் என சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மேலும் புதிய பாடத்திட்டத்தை பயிற்றுவிக்க 210 நாட்கள் தேவைப்படும் என்பதால் ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படுகிறது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

முன்னதாக தாய்மொழி, ஆங்கிலம் தவிர மூன்றாவது மொழியாக இந்தி மொழி பயிற்றுவிக்கப்பட புதிய கல்விக்கொள்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply