நிவர் புயலை தொடர்ந்து வங்கக்கடலில் அடுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்றும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக உருவெடுக்க வாய்ப்பு என்றும், நவம்பர் 29ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்றும், காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நிவர் புயல் இன்று அதிகாலை 2.30 மணிக்குதான் கரையை கடந்த நிலையில் புயல் கரையை கடந்த சுவடு கூட இன்னும் போகவில்லை
ஆனால் அதற்குள் அடுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.