தேர்தல் நாளில் முக்கிய பணிகளில் இருப்பவர்கள் யார் யார் தபால் வாக்குகள் போடலாம் என்பது குறித்த ஒரு பட்டியலை தேர்தல் ஆணையம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது

இதன்படி தேர்தல் நடைபெறும் நாளில் பணியில் உள்ள ரயில்வே துறை ஊழியர்கள் பத்திரிக்கையாளர்கள் விமானம் மற்றும் கப்பல் துறை ஊழியர்கள் ஆகியோர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

மேலும் 80 வயதுக்கு மேற்பட்டோர் தேர்தல் ஆணையத்திற்கு விண்ணப்பம் செய்தால் அவர்களுக்கும் தபால் வாக்குகள் அளிக்க அனுமதிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு இதோ

Leave a Reply