தனுஷால் திமுகவின் கோடிக்கணக்கான சொத்துக்கு ஆபத்தா? அதிர்ச்சி தகவல்
கடந்த சில நாட்களாக முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது என்ற குற்றச்சாட்டு பரபரப்பாக இருந்து வருகிறது. டாக்டர் ராமதாஸ் கிளம்பிய இந்த விவகாரம் தற்போது பூதாகரமாகியுள்ளது
இந்த நிலையில் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்திருப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையம் உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உதயநிதி ஸ்டாலினிடம் பட்டியல் இனத்தவர் ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் வரும் 19 விசாரணை நடத்தவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
தனுஷ் நடித்த ‘அசுரன்’ படத்தை பார்த்த திமுக தலைவர் முக ஸ்டாலின், பஞ்சமி நிலம் குறித்து கூறிய கருத்தால் இந்த பிரச்சனை தொடங்கியது என்பதும் அசுரன் படத்தை ஸ்டாலின் பார்க்காமல் இருந்திருந்தாலோ, அல்லது அந்த படம் குறித்து கருத்து சொல்லாமல் இருந்திருந்தாலோ இன்று இந்த சிக்கல் ஏற்பட்டிருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.