shadow

தனி ஆளாக போராடும் புஜாரா? ஒன்றை இலக்கங்களில் அவுட் ஆகும் பேட்ஸ்மேன்கள்

நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கிய இந்தியா, இலங்கை டெஸ்ட் போட்டி மழை காரணமாக வெறும் 11.5 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. ஆனால் அந்த ஓவர்களிலேயே விராத்கோஹ்லி உள்பட இந்தியா 3 முக்கிய விக்கெட்டுக்களை இழந்துவிட்டது.

இந்த நிலையில் இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில் ரஹானே மற்றும் அஸ்வின் ஆகியோர்களின் விக்கெட்டுக்களும் சொற்ப ரன்களுக்கு விழுந்தன. ஐந்து விக்கெட்டுக்களும் ஒற்றை இலக்க ரன்களுக்கு வீழ்ந்த நிலையில் புஜாரா மட்டும் தனியாளாக போராடி வருகிறார். அவர் 47 ரன்களுடன் விளையாடி வருகிறார்

இந்த நிலையில் காலை 11 மணி அளவில் மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டுள்ளது. இந்திய அணி இதுவரை 74 ரன்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்துள்ளது

Leave a Reply