தடை நீங்கியது: விரைவில் ரிலீஸ் ஆகும் ‘கொலையுதிர் காலம்

நயன்தாரா நடித்த ‘கொலையுதிர்க்காலம்’ திரைப்படம் ஜூன் 14ஆம் தேதியே ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்த நிலையில் இந்த படத்தின் ரிலீசுக்கு நீதிமன்றம் திடீரென தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது

இந்த நிலையில் ‘கொலையுதிர்க்காலம் படத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை தற்போது நீக்கப்பட்டதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதி விரைவில் இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக இந்த படம் ஜூலை இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

சுஜாதாவின் ‘கொலையுதிர்காலம்’ என்ற நாவலின் உரிமையை தான் பெற்றுள்ளதால் அதே டைட்டிலில் வெளியாகவிருக்கும் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் ‘விடியும் முன்’ என்ற படத்தின் இயக்குனர் பாலாஜி குமார் என்பவர் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply