shadow

தஞ்சையில் நடக்கவிருந்த ரவிசங்கரின் நிகழ்ச்சிக்கு இடைக்காலத் தடை

தஞ்சை பெரிய கோயிலில் நடக்கவிருந்த ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் நிகழ்ச்சிக்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தஞ்சை பெரிய கோயிலில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் ‘வாழும் கலை’ அமைப்பின் சார்பில் 2 நாள் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக கோயிலுக்கு அருகில் ஒரு பந்தல் போடப்பட்டுள்ளது. கோயிலின் உள் பகுதியில் தனியார் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டதற்கும், பந்தல் அமைக்கப்பட்டதற்கும் எதிர்ப்பு எழுந்தது. தஞ்சை கோவில் வளாகத்தில் தனியார் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும் இது தமிழக பாரம்பரியத்தை சிதைக்கும் செயல் என்றும் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவிலில் நிகழ்ச்சி நடத்த தடை விதிக்க வேண்டுமென்று மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் தனியார் அமைப்புகளுக்கு கோவிலுக்குள் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கினால் கோவிலின் பாரம்பரியம் பாழாகும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மதுரை உயர் நீதிமன்றம் தஞ்சை பெரியகோயிலில் இன்று மாலை தொடங்கவிருந்த 2 நாள் தியான நிகழ்ச்சிக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply