shadow

தஞ்சையில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2ஏ தேர்வுக்கு இலவச பயிற்சி

தஞ்சை மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2ஏ தேர்வுக்கு விண்ணப்பித்தோருக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவகம் சார்பில் இலவச பயிற்சிகள் வழங்கப்படும் என்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2ஏ பிரிவில் ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகள் கொண்ட 1953 பணியிடங்களுக்கான TNPSC Group II (A) போட்டித் தேர்வு 06.08.2017 அன்று நடைபெற உள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 26.05.2017

இப் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தஞ்சாவூர் மாவட்ட வேலை நாடும் இளைஞர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலமாக இலவச பயிற்சி வகுப்புகள் 25.05.2017 முதல் நடத்தப்பட உள்ளது.

பயிற்சி வகுப்புகள் 27.05.2017 முதல் தேர்வு நாள் வரை அனைத்து விடுமுறை நாட்களிலும் (சனி, ஞாயிறு) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். பயிற்சி வகுப்புகள் அனுபவமிக்க கல்லூரி பேராசிரியர்களால் நடத்தப்பட உள்ளது. அவ்வப்போது மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.

தேர்வு எழுதும் மாணவர்களின் வசதிக்காக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டித் தேர்வுகளுக்கான ஆதார நூல்கள் அடங்கிய நூலக வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

TNPSC Group II (A) தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மனுதாரர்கள் விண்ணப்பித்த ஆதாரத்துடன் தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் 25.05.2017 வருகைபுரிந்து இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது.” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply