இந்திய வீரர் ரோகித் சர்மா உடல்தகுதி சோதனையில் தேறி விட்டதை அடுத்து அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட இன்று சிட்னிக்கு கிளம்புகிறார்

ஆனாலும் அவர் அங்கு 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்துதலை கடைபிடிக்க வேண்டிய நிலை இருப்பதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் விளையாட வாய்ப்பு இல்லை என தெரிகிறது

இருப்பினும் 2வது மற்றும் 3வது டெஸ்டில் அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஆஸ்திரேலியாவில் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் நடைமுறை முடிந்ததும் இந்திய அணியின் மருத்துவ குழு அவரது உடல்தகுதியை மறுஆய்வு செய்த பின்னரே ரோஹித் சர்மா டெஸ்ட் தொடரில் பங்கேற்பது குறித்து முடிவு செய்யப்படும்’ என்று பிசிசிஐ கூறியுள்ளது.

Leave a Reply