shadow

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கைது

டெல்லியில் சிபிஐ அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கைது செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சி.பி.ஐ சிறப்பு இயக்குநர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டும், பல‌ சி.பி.ஐ அதிகாரிகள் பாஜக அரசால் பணியிட மாற்றம் செய்யப்பட்டும் வருகின்றனர். இதையடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ரஃபேல் ஊழல் ஆவணங்களை அழிப்பதற்காகவே இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

சிபிஐ இயக்குனர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பியது தவறு என்பதை வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் சிபிஐ அலுவலகங்கள் முன் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதில் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகம் முன் போராட்டம் நடத்திய ராகுல்காந்தி கைது செய்யப்பட்டார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.

Leave a Reply