shadow

டெல்லியில் இடியுடன் கூடிய கனமழை: 9 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக தகவல்!

டெல்லியில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டில் இருந்து டெல்லி விமான நிலையத்திற்கு வந்த 9 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளது

டெல்லியில் நேற்று மாலை நேரத்தில் திடீரென பயங்கர இடியுடன் கூடிய மழை கொட்டியதால் அந்த பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அலுவலகத்தில் இருந்து வீடுதிரும்பிய பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இந்த நிலையில் இடியுடன் கூடிய கனமழை காரணமாக டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு வந்த 9 விமானங்கள் வேறு ஊர்களுக்கு திருப்பி விடப்பட்டதாக தெரிகிறது. இந்த விமானங்கள் ஜெயபூர் மற்றும் லக்னோ விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. அதேபோல் நொய்டா, கூர்கன், காசியாபாத், பரிதாபாத் ஆகிய ஊர்களிலும் பல மணி நேரமாக மழை பெய்தது.

Leave a Reply