டுவிட்டரில் கார்த்தியின் ‘சினம்’, நன்றி தெரிவித்த அருண்விஜய்!

தமிழ் சினிமாவில் சினிமா பின்னணி இருந்தும் தானாக போராடி முன்னுக்கு வந்த நடிகர்களில் ஒருவர் அருண்விஜய். ’என்னை அறிந்தால்’ படம் கொடுத்த திருப்புமுனையை பயன்படுத்தி தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வரும் அருண்விஜய் தற்போது நான்கு படங்களில் நடித்து வருகிறார்.

‘அக்னி சிறகுகள், பாக்ஸர், மாஃபியா மற்றும் ஜி.என்.ஆர் குமரவேலன் இயக்கத்தில் ஒரு படம் என நடித்து வரும் அருண்விஜய், இன்று ஜி.என்.ஆர் குமரவேலன் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் டைட்டிலை சற்றுமுன் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார்.

’சினம்’ என அறிவிக்கப்பட்டுள்ள இந்த டைட்டிலை நடிகர் கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட அதற்கு அருண்விஜய், கார்த்திக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ஷபிர் இசையமைப்பில் கோபிநாத் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply