டிராவை நோக்கி செல்கிறது கொல்கத்தா டெஸ்ட் போட்டி
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கடந்த 16ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் இந்திய இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிராவை நோக்கி செல்கிறது.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 172 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் 171 ரன்களுக்கு ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்துள்ளது. இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 294 ரன்கள் எடுத்துள்ளதால் தற்போது இந்திய அணி 49 ரன்கள் அதிகம் உள்ள நிலையில் உள்ளது.
இன்று போட்டியின் கடைசி நாள் என்பதால் இந்த போட்டி முடிவுக்கு வர வாய்ப்பு மிக மிக குறைவு. எனவே இந்த டெஸ்ட் டிராவை நோக்கி செல்கிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.