மருத்துவ நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்

கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க மருத்துவர்கள் உடனடியாக மனித உடல்களை சுத்தம் செய்யும் கிருமிநாசினியை கண்டு பிடிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார். இந்தப் பரிந்துரைக்கு இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது ஒரு முட்டாள்தனமான கருத்து என்றும் கிருமிநாசினி கொண்டு உடலுக்கு உள்ளேயும் வெளியேயும் சுத்தப்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் டிரம்ப் பேச்சை கேட்டு யாராவது கிருமிநாசினி குடித்து உடலை சுத்தப்படுத்த நினைத்தால் கொரோனாவல் இறப்பதற்கு முன்பே அவர் கிருமி நாசினியாக இறந்துவிடுவார் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்தனர்.

எனவே டிரம்ப் பேச்சைக் கேட்டும் யாரும் கிருமிநாசினியை குடிக்க வேண்டாம் என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply