டிடிவி தினகரனை வம்புக்கு இழுக்கின்றதா மக்கள் நீதி மய்யம்?
மக்கள் நீதி மய்யம் கட்சி என்ற கட்சியை ஆரம்பித்துள்ள கமல்ஹாசன் சந்திக்கும் முதல் தேர்தலாக வரும் பாராளுமன்ற தேர்தல் இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் அவர் திமுக, அதிமுக, பாஜக கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று ஏற்கனவே அறிவித்துவிட்டார். இந்த நிலையில் தற்போது தினகரனின் அமமுக கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நீதி கட்சியின் செய்தி தொடர்பாளர் சினேகன் நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘திமுகவுடன் கூட்டணி இல்லை என்பது போலவே தினகரன் கட்சியுடனும் கூட்டணி இல்லை என்றும், தினகரன் தன்னைப் பாதுகாக்கவும், தன்னை அடையாளப் படுத்தவும் மட்டுமே கட்சி நடத்துவதாகவும், கூறியுள்ளார்.
ஏற்கனவே 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்று கமல்ஹாசன் அறிவித்த பின்னர் அவருடைய கட்சியின் செய்தி தொடர்பாளர் அமமுகவுடன் கூட்டணி இல்லை என்று கூறியிருப்பது தினகரனை வம்புக்கு இழுப்பதாகவே கருதப்படுவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.