டிக்டாக் செயலிக்கு தடையா? சட்டமன்றத்தில் அமைச்சர் தகவல்
புளூவேல் கேம் போன்று கடந்த சில மாதங்களாக டிக்டக் செயலி மூலம் வீடியோ பதிவு செய்வது பலருக்கு ஒரு வழக்கமாக ஆகிவிட்டது. சில சமயம் எல்லை மீறியும் ஆபாசமாகவும் வீடியோக்கள் பதிவு செய்யப்படுவதால் இந்த செயலியை தடை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுருத்தி வந்தனர்.
இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலளித்த பேசிய அமைச்சர் மணிகண்டன் டிக் டாக் மூலம் ஆபாச செயல்களும், சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படுவதாக புகார் வந்து கொண்டிருப்பதால் இந்த செயலியை தடை செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்’ என்று கூறியுள்ளர்.
Leave a Reply
You must be logged in to post a comment.