அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிப்பெற்ற ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வரும் ஜனவரி மாதம் முறைப்படி அதிபராக பதவியேற்க உள்ள நிலையில் அவருடைய அமைச்சரவையில் அமெரிக்க வாழ் இந்தியர்களான விவேக் மூர்த்தியும், அருண் மஜூம்தாரும் ஜோ பைடன் இடம்பெறலாம் என செய்தி வெளியாகியுள்ளது

ஏற்கனவே, ஜோ பைடன் அமைத்துள்ள கொரோனா கட்டுப்பாட்டு ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருக்கும் விவேக் மூர்த்திக்கு சுகாதாரம் மற்றும் மனித வளத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்படலாம் என தெரிகிறது

மேலும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிவரும் அருண் மஜூம்தார் எரிசக்தி துறை அமைச்சராக நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

Leave a Reply