shadow

உலகிலேயே இந்தியாவில்தான் கடந்த சில நாட்களாக ஒரு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகி வரும் நிலையில் இந்தியாவுக்கு உலக நாடுகள் உதவிகளை குவித்து வருகின்றன

அமெரிக்கா உள்பட பல நாடுகள் இந்தியாவுக்கு உதவி செய்துவரும் நிலையில் தற்போது ஜெர்மனியில் இருந்து டெல்லிக்கு மருத்துவ உபகரண பொருட்களுடன் கூடிய விமானம் ஒன்று வந்துள்ளது

இந்த விமானத்தில் ஜெர்மனி கிரீஸ் பின்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து ஆக்சிஜன் உள்ளிட்ட பல மருந்துப் பொருள்கள் வந்துள்ளதாக புகைப்படங்களுடன் கூடிய தகவல் வெளிவந்துள்ளது

இந்த மருந்து பொருட்கள் இந்தியாவில் உள்ள பல மருத்துவமனைகளுக்கு பிரித்து உடனடியாக அனுப்பப்படும் என மத்திய சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன