ஜெயலலிதா சக்தி வாய்ந்தவர், கருணாநிதி சிந்தனையாளர்: வெங்கையா நாயுடு
தமிழகத்தின் இரண்டு ஆளுமையுள்ள தலைவர்களான ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோர்களின் மறைவால் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இந்த வெற்றிடத்தை நிரப்புபவர்கள் யாருமே இல்லை என்பதே தற்போதைய மக்களின் கருத்தாக உள்ளது.
இந்த நிலையில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு ஜெயலலிதா மற்றும் கருணாநிதி குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். நேற்று டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் தென்னிந்திய பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடல் செய்தபோது அவர் கூறியதாவது:
மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சக்திவாய்ந்த, புத்திக்கூர்மை உள்ள தலைவர். அதேபோல் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சிறந்த சிந்தனைவாதி, தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர்’ என்று வெங்கையா நாயுடு தெரிவித்தார்
Leave a Reply
You must be logged in to post a comment.