shadow

ஜெட் ஏர்வேஸ் விமானத்தைக் கடத்தப் போவதாக மிரட்டல்

டெல்லியில் இருந்து மும்பை சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானத்தை கடத்தப் போவதாக மிரட்டல் வந்ததால் அந்த விமானம் அகமதாபாத்தில் தரை இறக்கப்பட்டது.

ஜெட் ஏர்வேஸ் விமானம் 9W339 டெல்லியில் இருந்து இன்று அதிகாலை 2.55 மணிக்கு மும்பைக்கு புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விமான கழிவறையில் ஒரு கடிதத்தைக் கண்டெடுக்கப்பட்டது.

அக்கடிதத்தில் விமானத்தில் கடத்தல்காரர்களும் வெடி பொருட்களும் இருப்பதாக கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து அதிகாலை 3.45 மணி அளவில் குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்திற்குச் சென்று விமானம் தரை இறக்கப்பட்டது.

பாதுகாப்பு காரணங்களுக்காக விமானம் தரை இறக்கப்படுவதாக பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 115 பயணிகளும் 7 விமான பணியாளர்களும் இருந்தனர்.

Leave a Reply