அதிரடி அறிவிப்பு

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு நாளை மறுநாள் அதாவது ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதை அடுத்து ஒரு சில மாநிலங்களில் ஏற்கனவே ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்புகள்
வெளியிட்டுள்ளன

மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் ஜூலை 31-ஆம் தேதி வரை ஏற்கனவே ஊரடங்கு நீட்டிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது மணிப்பூர் மாநிலம் ஜூலை 15 வரையில் ஊரடங்கை நீடிப்பதாக சற்று முன்னர் அறிவித்துள்ளது தமிழகம் உள்பட மற்ற மாநிலங்களில் இது குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply