துணை முதல்வர் அறிவிப்பால் பரபரப்பு
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் கடந்த சில மாதங்களாக அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் வரும் மாதங்களில் இன்னும் பல மடங்கு கொரோனா வைரஸ் பரவல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் டெல்லியில் ஜூலை இறுதிக்குள் 80,000 படுக்கைகள் தேவைப்படும் என்று அம்மாநில துணை முதல்வர் மணிஷ் சிசோடியா அவர்கள் கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
மேலும் டெல்லியில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக இல்லை என்று கூறிய துணை முதல்வர் வரும் ஜூலை மாத இறுதிக்குள் நோயாளிக்கு சிகிச்சை அளிக்க 80,000 படுக்கைகள் தேவைப்படலாம் என்று கூறியுள்ளார்
தலைநகர் டெல்லியில் தற்போது 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.