ஜூன் 3ல் பள்ளித்திறப்பு உறுதி: ஸ்மார்ட்போன், இருசக்கர வாகனங்களுக்கு தடை
கோடை விடுமுறை முடிவடைந்து வரும் ஜூன் 3ஆம் தேதி தமிழகத்தில் உள்ள பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது ஸ்மார்ட்போன் கொண்டு வரக்கூடாது என்றும் மாணவர்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டி வரக்கூடாது என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது
இதுதொடர்பாக உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பிள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
காலை 9.15 மணிக்குள் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும். இருச்சக்கர வாகனம், செல்போன் உள்ளிட்ட பொருட்களை கொண்டுவரகூடாது. மீறி கொண்டு வந்தால் அப்பொருட்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும், பள்ளி மாணவர்களுக்கு என குறிப்பிடப்பட்டுள்ள சீருடையில் மட்டுமே வரவேண்டும். கைகளில் வளையம், கயிறு, செயின் ஆகியவை அணியக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.