ஜாமீன் பெற்றும் வெளியே வரமுடியாத ப.சிதம்பரம்
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.,சிதம்பரம் சிபிஐ தாக்கல் செய்த வழக்கில் ஜாமீன் பெற்ற நிலையில், தற்போது அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகிய இரண்டு அமைப்புகளும் சிதம்பரம் அவர்களை கைது செய்த நிலையில் அவர் தற்போது டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்து கைது செய்த வழக்கில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
தற்போது ப.சிதம்பரம் அமலாக்கத் துறை காவலில் இருக்கிறார் என்பதும் இந்த காவல் நாளையுடன் நிறைவு பெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.