ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தம் எப்போது? புதிய தகவல்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல், ஊதிய முரண்பாட்டை களைதல், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குதல் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கடந்த 4ஆம் தேதி அறிவித்தனர்.
ஆனால் இந்த வேலைநிறுத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணையின்போது நீதிமன்ற அறிவுரைகளை ஏற்று ஜனவரி 10ம் தேதி வரை தங்களது போராட்டத்தை ஒத்திவைப்பதாக ஜாக்டோஜியோ உயர் மட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்
நேற்றுடன் இந்த காலக்கெடு முடிவடைந்த நிலையில் வேலைநிறுத்தம் குறித்த அறிவிப்பை ஜாக்டோ ஜியோ இன்று அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதன்படி வேலைநிறுத்தப் போராட்டத்தை மீண்டும் காலவரையற்ற ஒத்திவைப்பதாக, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.