கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் முதல் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

வரும் டிசம்பர் வரை நாடு முழுவதும் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை என ஏற்கனவே மத்திய அரசின் கல்வி செயலாளர் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் கேரளாவில் டிசம்பர் வரை பள்ளிகள் திறக்கப்படாது என்றும் ஜனவரியில் தான் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

ஜனவரியில் பள்ளிகள் திறக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply