சோனியா காந்திக்கு வாழ்த்து தெரிவித்த எச்.வசந்தகுமார்
நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவராக இன்று காலை சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவருக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் கூட்டணி கட்சி தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்ற்னார்.
இந்த நிலையில் கன்னியாகுமர் தொகுதியில் வெற்று பெற்று எம்பியாகியுள்ள வசந்தகுமார் சோனியா காந்தியை இன்று டெல்லியில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது: 2019 பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அணைத்து காங்கிரஸ் எம்பிகளும் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோர்களை சந்தித்து வாழ்த்து பெற்றோம். நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மேடம் அவர்களுக்கு வாழ்த்தும் தெரிவித்தேன் என்று கூறியுள்ளார்.
2019 பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அணைத்து #Congress #MP 'களும் இன்று @INCIndia தலைவர் @RahulGandhi மற்றும் Smt.Sonia Gandhi அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றோம். நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மேடம் அவர்களுக்கு வாழ்த்தும் தெரிவித்தேன். pic.twitter.com/Sx3ip8fLGZ
— vasanthakumarH (@vasanthakumarH) June 1, 2019
Leave a Reply
You must be logged in to post a comment.