செவிலியர் பணி இடமாற்றம்: வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

செவிலியர் பணி இடமாற்றத்தில் முறைகேடு நடப்பதாக மதுரையை சேர்ந்த கார்த்திக் என்பவர் வழக்கு தொடர்ந்தார். கோடிக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு செவிலியர் பணி மாறுதல் நடத்தப்படுவதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது கார்த்திக் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் போதுமான ஆதாரங்கள் இல்லாமல் மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் ஏற்காது என்றும், கோடிக் கணக்கில் பணம் பெற்று செவிலியர் பணியிட மாற்றம் நடைபெறுவதாக வழக்கு தொடர்ந்தவருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply