shadow

இன்றைய உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் செவிலியர்களின் சேவையை பாராட்டி பலர் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்

இந்த நிலையில் செவிலியர் தினத்தில் செவிலியர் ஒருவர் விபத்தில் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

சீர்காழி அருகே வடகால் துணை சுகாதார நிலையத்தில் பணியாற்றும் செவிலியர் உஷா என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த டிராக்டர் மோதியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

அந்த டிராக்டரை 15 வயது சிறுவன் ஓட்டி வந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது இதனால் அந்த பகுதியில் பெரும் சோகமாக உள்ளது