shadow

அணிலால் மின் தடை ஏற்பட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதை கிண்டல் செய்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

ஆலங்குளம் துணை மின் நிலையத்து மின் பிரச்சினைகளுக்கு அணில்கள் காரணமென, 2020ல் மதுரை உயர்நீதிமன்றத்தில் அப்போதைய அதிமுக அரசு அளித்த விளக்கம் இது. பார்க்க படித்தவர் போலிருக்கும் செல்லூர் ராஜூ, இதைப்பற்றி தங்கமணியிடமோ உயர்நீதி மன்றத்திடமோ கேட்டு புத்தி தெளிய வேண்டுகிறேன்.