செல்பி எடுத்தபோது விபரீதம்: ஆற்றுக்குள் விழுந்த் 4 வயது சிறுவன்
ஸ்மார்ட்போன் வேகமாக பரவ தொடங்கியதில் இருந்தே உலகம் முழுவதும் செல்பி மோகமும் ஆரம்பித்துவிட்டது. ஆபத்தான இடங்களில் செல்பி எடுப்பதால் ஒவ்வொரு நாளும் பல உயிர்கள் மாண்டு வரும் நிலையில் இன்று தமிழகத்தில் கரூரிலும் செல்பி மோகத்தால் ஒரு விபரீதம் ஏற்பட்டுள்ளது
கரூரைச் சேர்ந்த பாபு- ஷோபா தம்பதியின் 4 வயது மகன் தஷ்வந்த் என்ற சிறுவனுக்கு நேற்று பிறந்தநாள். இந்த கொண்டாட்டத்தை முடித்துவிட்டு இன்று மோகனூர் காவிரி ஆற்றில் தண்ணீர் பாய்ந்தோடுவதைப் பார்ப்பதற்காக, அவர்கள் மகனுடன் வந்தனர்.
அப்போது தம்பதியினர் ஒருபக்கம் “செல்ஃபி” எடுத்து கொண்டிருந்தபோது இன்னொரு பக்கம் அவர்களுடைய மகன் தஷ்வந்த் ஆற்றில் தவறி விழுந்ததில், ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டான். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறி அழுதனர். தஷ்வந்த்தை தேடும் பணியில் தீயணைப்பு வீர்ரகளும்,போலீஸாரும் ஈடுபட்டுள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.