செய்த பாவத்திற்கு உடனே தண்டனை கொடுத்த கடவுள்: போலந்து நாட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சி
அரசன் அன்றே கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்பதெல்லாம் பழைய பழமொழி. இப்போது தெய்வமும் உடனே தண்டனை கொடுக்க ஆரம்பித்துவிட்டது என்பது போலந்து நாட்டில் நடந்த ஒரு சம்பவத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
போலந்து நாட்டில் உள்ள ஒருவர் கல்லால் ஒரு கடையின் கண்ணாடியை அடித்து நொறுக்கினார். இதுகுறித்து பாதசாரி ஒருவர் தட்டிகேட்டபோது அவருடைய சட்டையை பிடித்தும் அடாவடி செய்தார். இந்த நிலையில் கண்ணாடியை முழுவதும் உடைத்துவிட்டி பின்னர் சாலையை அவர் கடந்தபோது கார் ஒன்று மோதியதால் படுகாயம் அடைந்தார்.
அவர் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுகுறித்த சிசிடிவி காட்சி ஒன்றின் வீடியோவை தற்போது பார்க்கலாம்
Leave a Reply
You must be logged in to post a comment.