பரபரப்பு தகவல்
சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் என்ற பகுதியில் இருக்கும் ஹூண்டாய் கார் தொழிற்சாலை திடீரென வரும் 19ஆம் தேதி முதல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
ஆனால் 2020 ஆம் ஆண்டு கால பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளவே மூடப்படுவதாகவும் வேறு எந்தவித காரணமும் இல்லை என்றும் ஹூண்டாய் தொழிற்சாலை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்
இந்த தொழிற்சாலையில் ஒவ்வொரு ஆண்டும் ரோபோக்கள் மற்றும் இயந்திரங்கள் கொண்டு அதிக செயல்திறன் உள்ள புதிய தொழில்நுட்பங்கள் பொருத்தப்படும் என்றும் அதனை அடுத்து மேம்பாட்டுக்காக சில நாட்கள் மூடப்படுவது வழக்கமான ஒன்று என்றும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்
இருப்பினும் இந்த கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்தில் திடீரென ஹூண்டாய் தொழிற்சாலை மூடப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.