shadow

சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு: ஏன் தெரியுமா?

சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு இன்று முதல் நாளை வரை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழா நாளை நடைபெறவுள்ளது. அதனையடுத்து ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது.

இந்த சிலை திறப்பு விழாவில் பங்கேற்க காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வர உள்ளனர். இதனையொட்டி சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply