சென்னை வருகிறார் ராகுல்: கருணாநிதியை சந்தித்து நலம் விசாரிக்கவுள்ளதாக தகவல்
திமுக தலைவர் கருணாநிதி கடந்த நான்கு நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இருந்ததை விட தற்போது முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், செயற்கை கருவிகள் இன்றி அவர் சுவாசிப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன
இந்த நிலையில் கருணாநிதியை சந்திக்க இந்த நான்கு நாட்களில் தேசிய, தமிழக அரசியல் தலைவர்களும் திரையுலக பிரமுகர்களும் திரண்ட வண்ணம் இருந்தனர். இந்த நிலையில் இன்று மாலை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சென்னை வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது
இந்த தகவலை உறுதி செய்த தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ‘ராகுல்காந்தி இன்று மதியம் 12.30 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கிளம்பி சென்னை வரவுள்ளதாகவும், அவர் காவேரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலினிடம் விசாரிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். ராகுல்காந்தியின் வருகையை முன்னிட்டி காவேரி மருத்துவமனை பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.