சென்னை வந்த சீன வாலிபருக்கு கொரோனா வைரஸ் தாக்குதலா?: திடுக்கிடும் தகவல்

சீனாவில் இருந்து சென்னை வந்த சீன வாலிபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் காய்ச்சல் இருக்கின்றதா? என்ற சோதனை செய்யப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய சீன வாலிபரை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருக்கின்றதா? என பரிசோதனை செய்ய அவர் உடனடியாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும் சீனாவில் இருந்து சென்னை மட்டுமின்றி அனைத்து விமான நிலையங்களுக்கும் வருபவர்கள் தீவிர பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply