பரபரப்பு தகவல்

கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களாக தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களும் மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முதல் அனைத்து கோவில்களும் திறக்கப்பட தமிழக அரசு அனுமதி அளித்தது என்பது தெரிந்ததே

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்பட அனைத்து கோயில்களுக்கும் நேற்று பக்தர்கள் சென்று வழிபட்டனர்

இந்த நிலையில் சென்னை வடபழனி கோவிலில் மழை நீர் சேகரிப்பு பணி நடைபெறுவதால் நேற்று பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை இதனையடுத்து இன்று முதல் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என சென்னை வடபழனி முருகன் கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply