அதிர்ச்சி தகவல்
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 33 டாக்டர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சென்னையில், ஏற்கனவே தனியார் மருத்துவமனையில் டாக்டர்கள் இருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து உள்ள நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 33 டாக்டர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த 33 டாக்டர்களில் உயர்ந்த பொறுப்பில் இருக்கும் பெண் அதிகாரியும் ஒருவர் என்ற தகவல் அதிர்ச்சிக்குரியது ஆகும்.
இதேபோல் மற்ற மருத்துவமனையில் கொரோனா வார்டில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் சிலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.