சென்னை மெரீனாவில் உள்ள கடைகள் குறித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை மெரினா கடற்கரையில் உரிமம் இல்லாமல் உள்ள சுமார் இரண்டாயிரம் கடைகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை மெரீனாவில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டிருக்கும் கடைகளை அகற்றுவது குறித்த வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தபோது, ‘உரிமம் இல்லாமல் உள்ள 2000 கடைகளை உடனே அகற்றுங்கள். இனிமேல், குறைவான எண்ணிக்கையில் மட்டும் லைசென்ஸ் கொடுங்கள். நீங்கள் அமைக்க கூடிய உணவகங்கள், மிதி வண்டி நிறுத்துமிடங்களால், கடல் பாதுகாப்பு மண்டலத்திற்கு இடையூறு ஏற்படக்கூடாது என நீதிபதிகள் வலியுறுத்தினர்.
மேலும், கலங்கரை விளக்கத்திலுள்ள, மீன் சந்தை ஏன் அகற்றப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அனைத்து விவரமும் அடங்கிய விரிவான அறிக்கையை பிப். 1 ல் தாக்கல் செய்ய வேண்டும் என கூறி, வழக்கை, பிப்ரவரி 5ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.